Posts

Showing posts from March, 2022

தற்சார்பு குருடம்பாளையம்

 தற்சார்பு  பிரதமர் மோடியை  அழைத்துவந்து கோவை குருடம்பாளையத்தை காண்பியுங்கள். நாடு முழுவதும் கொண்டு செல்ல பிரதமரால் மட்டுமே முடியும். அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும் அழைத்துவந்து காண்பியுங்கள். தமிழ்நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழும் கோவை குருடம்பாளையம் கிராமம்!!! “வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம். சாயங்காலம் சாணம் கிடைச்சிடும்." கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் கிராமத்தின் கடைக்கோடி பகுதி அது. வானுயர்ந்து வளர்ந்திருக்கிறது குருடிமலை. ‘ம்ம்மா...’ என்று குரல் கொடுக்கின்றன தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகள். சீருடை அணிந்த பெண்மணி மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் சாணம் அள்ளிக்கொண்டிருக்கிறார். மாட்டு சாணம் கொட்டப்பட்டிருக்கும் பகுதியில் மேய்ந்துக்கொண்டிருக்கின்றன ஏராளமான வாத்துக்கள், நாட்டுக் கோழிகள், புறாக்கள்! குப்பை அல்ல; மாற்று ஆதாரப் பொருள்! அருகே ஒரு கிட்டங்கி இருக்கிறது. அதன் அருகில் மிகப் பெரிய கூடம். ஆங் காங்கே கையாலும் மி...